வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆள் இல்லாத விமானத்தை பயன்படுத்தி மருத்துவ சேவை செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை எம்.ஐ.டி. தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு ‘தக்ஷா’ என்ற பெயரில் பங்கேற்கிறது.
55 நாடுகள் பங்கேற்கும் இந்த தொழில்நுட்ப போட்டியில் எம்.ஐ.டி. மாணவர் குழு 2-வது இடம் பிடித்துள்ளது. ஆள் இல்லா குட்டி விமானம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்வதே இந்த போட்டி.
இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் அஜித், இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும், தொழில்நுட்ப உதவிகளை செய்வதாகவும் கூறினார். எம்.ஐ.டி. நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்தார்.
வெளியே உள்ளவர்கள் அதில் பங்கேற்க முடியாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முறைப்படி விண்ணப்பம் செய்தார். அதைத் தொடர்ந்து ஆள் இல்லா விமான போட்டியில் பங்கேற்கும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ஹெலிகாப்டர் பைலட் மற்றும் ஆள் இல்லா விமானத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு மாத சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த சம்பளம் தனக்கு வேண்டாம். இதை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கி விடுங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித், ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தயாரிக்கும் ஆள் இல்லா விமானம் அமைப்பதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப ஆலோசனை ஆகியவற்றை வழங்குகிறார். பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...