Latest News :

கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வேன் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்!
Friday May-04 2018

மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நடிகர் மன்சூரலிகான், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற போது, தரக்குறைவாக பேசியதாக கூறி போலீசார் கைது செய்தனர். அவருடன் கைதான சில சினிமா பிரபலங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்சூரலிகான் மட்டும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து புயல் சிறையில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும், என்று சில நடிகர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட வந்த மன்சூரலிகான், அங்கு செய்தியாளர்களிடம் பேசும் போது, “சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதை கேள்விப்பட்டு அதனை பார்ப்பதற்காக வந்துள்ளேன். மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

 

அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக் கூடாது. இதற்காக போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டி வழிச்சாலை அமைந்தால் எட்டுபேரை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.” என்று தெரிவித்தார்.

 

ஏற்கனவே, சர்ச்சையாக பேசியதால் சிறைக்கு சென்ற மன்சூர் அலிகான், மீண்டும் சர்ச்சையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

2545

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

‘வருணன்’ அனைவருக்கும் நெருக்கமான கதை - பிரபலங்கள் பாராட்டு
Tuesday March-11 2025

இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...

Recent Gallery