திரு இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ரெஜினாவின் கவர்ச்சியான அழகு பெரிதும் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இதே படத்திற்காக ரெஜினா தனது சினிமா பயணத்தில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளார். ஆம், இப்படத்திற்காக ரெஜினா தனது சொந்த குரலில் முதல் முறையாக டப்பிங் பேசியிருக்கிறார். ரெஜினாவின் இந்த முயற்சியை படக்குழுவினர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செழியன் இது குறித்து கூறுகையில், “ரெஜினா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் தமிழ் ஸ்க்ரிப்டை படித்ததும், தமிழில் அவரின் மொழி ஆளுமையையும் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டோம். அவர் நம்ம ஊரு சென்னை பொண்ணு, சென்னையில் தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். அவரிடம் ஏன் இதற்கு முன்பு சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்டபோது, யாரும் டப்பிங் பேச என்னை இதுவரை அணுகவில்லை என்றார். ரெஜினா சொந்த குரலில் டப்பிங் பேச இயக்குநர் திரு வாய்ப்பு அளிக்க, ரெஜினா எந்த குறையும் இல்லாமல் பேசி, அவரின் மொழி ஆளுமையால் எங்களை பிரமிக்க வைத்தார். அவரின் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியதன் மூலம், கதாபாத்திரம் முழுமை அடைந்தது.” என்று தெரிவித்தார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...