ஜே.எஸ் பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில், ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறுகையில், “தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் நீக்கும்.
’அண்டாவ காணோம்’ நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.
குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில், அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘அண்டாவ காணோம்’ என் கூற்றை நிரூபிக்கும்.
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் படங்கள், ‘அண்டாவ காணோம்’ போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளி வரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...