மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வந்த அருண் விஜய், தனது போஷன் அனைத்தையும் முடித்துவிட்டு அப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். தற்போது, பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘சாஹோ’ படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார்.
‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், அருண் விஜய்யும் தற்போது இணைந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...