மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வந்த அருண் விஜய், தனது போஷன் அனைத்தையும் முடித்துவிட்டு அப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். தற்போது, பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘சாஹோ’ படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார்.
‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், அருண் விஜய்யும் தற்போது இணைந்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...