திரையுலக தம்பதியான நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி, தமிழ் ரசிகர்களுக்கு பித்த ஜோடி ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு நடிப்பு, அரசியல், திரைப்படங்கள் தயாரிப்பு என்று பிஸியாக இருந்தாலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் வல்லவராக திகழ்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இயக்குநர் சுந்தர்.சி, குஷ்புவை விட தனக்கு மிகவும் பிடித்த நடிகை குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர்.சி-யிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர். அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.
பிறகு பேசியவர், "குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன். அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்.” கவலையுடன் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...