அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, சமூக வலைதளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படமாகும்.
விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதை சன் டிவி மற்றும் சன் மியூசிக் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதோடு, யூடியுபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப் போகிறார்களாம்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கு இரண்டு முன்னணி சேனல்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். சன் டிவி பெரிய தொகை கொடுக்க தயாராக இருக்க, அவர்களை விடவும் பெரிய தொகை கொடுத்து ‘மெர்சல்’ படத்தை வாங்க ஜீ தமிழ் முன் வந்துள்ளதாம். இதன் காரணமாக இதுவரை சாட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருக்கிறது.
இந்த இரண்டு சேனல்களில் யார் பெரிய தொகை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே ‘மெர்சல்’ சாட்டிலைட் உரிமை கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகின்றன.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...