டான்சராக சினிமா பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர், இயக்குநர் அவதாரம் எடுத்து பாலிவுட்டில் நம்பர் ஒன் இயக்குநர்களில் ஒருவரானவர், தமிழிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் பிரபுதேவா, இயக்குநருக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ’யங் மங் சங்’, ‘லட்சுமி’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்து வரும் பிரபுதேவா தனது அடுத்தப் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார்.
பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...