’இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இழக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கெசன்ரா, நந்திதா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இணைந்திருப்பதாலும், இப்படம் திகில் படம் என்பதாலும் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ரிலீஸாகமல் போனது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “படம் தயாரிப்பாளரின் கையில் இருக்கிறது. வெகு விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.
இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ் மதன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...