துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து பல்வேறு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர மரணம் கொலை அல்ல என்று துபாய் போலீசார் தெரிவித்தாலும், பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
டெல்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான வேத் பூஷன், தனது தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை தான், என்று வேத் பூஷன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய தகல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஸ்ரீதேவியின் மரணத்தில், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமானது என்றும், அதனால் தாவூதிற்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் வேத் பூஷன் கூறியுள்ளார்.
மேலும் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் காவல்துறை பிரதேச பரிசோதனை அறிக்கை மட்டுமே தந்துள்ளதாகவும், ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி, நுரையீறலில் தங்கிய நீரின் அளவு போன்ற எந்த தகவல்களையும் அந்நாட்டு போலீஸார் தரவில்லை, என குற்றம் சாட்டுவதோடு, தயாரிப்பாளர் விகாஸ் சிங், ஓமன் நாட்டில் ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி காப்பீடு இருப்பதாகவும், காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதனால் பணத்திற்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி மரணம் குறித்து வேத் பூஷன் வெளியிட்டு வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு, இதுபோன்ற தகவல்களால் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் பெரும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...