தூத்துக்குடி போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, செய்தியாளர்களை அவமதிக்கும் தோனியிலும், மிரட்டும் தோனியிலும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகளால் தான் காவல் துறை துப்பாக்கி சூட்டை நடத்தியது. சீருடையில் இருக்கும் காவலர்களை அடிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று கூறியவர், “எதற்கு எடுத்தாலும் போராட்டம்...போராட்டம்...என்று இருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்” என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் இத்தகைய கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பொது மக்களும் ரஜினிகாந்தின் மீது கோபமடைந்துள்ளனர்.
ஏற்கனவே, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரஜினிகாந்த் திணறுகிறார், என்ற கருத்து நிலவி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் பேசியிருப்பது, பலரையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த பேச்சுக்கு பல பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...