தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகராக திகழும் விஜயின், ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இங்கிலாந்து நாட்டின் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ‘மெர்சல்’ படம் வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த நிலையில், இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் இந்த வாரம் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெறுபவர்களை தேர்வு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும், பேவரட் நடிகர், நடிகைகள் என்ற விருது மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான பேவரட் நடிகர் விருதுக்கு ‘மெர்சல்’ படத்திற்காக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்று வரும் விஜய், தற்போது மற்றொமொரு கெளரவத்தையும் பெற இருப்பதால், அன்றைய தினம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...