சென்னை,மார்ச் 29 : ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் விஷால், நலிவடைந்த துயரத்தில் உள்ள சில திரையுலக கலைஞர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ‘ரத்தகண்ணீர்’, ‘தூக்குமேடை’, ‘பேசும் தெய்வம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியவரும், “நூறாண்டு காலம் வாழ்க...நோய் நொடி இல்லாமல் வளர்க...” என்ற மெகாஹிட் பாடலை பாடியவருமான பாடகி சரளா அம்மா, மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருவதாக, பத்திரிகை செய்தி மூலம் அறிந்த விஷால், அவர்களை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலமாக மாதம் ரூ.5 ஆயிரம் தருவதாக தெரிவித்ததோடு, அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...