’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விவசாயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிகர் சூர்யாவும் நடித்திருக்கிறார். அண்ணன் தம்பிகளான கார்த்தியையும், சூர்யாவையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க சில இயக்குநர்கள் முயற்சித்து வந்த நிலையில், அதனை இயக்குநர் பாண்டிராஜ் செய்து காட்டிவிட்டார். அதேபோல், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நயந்தாரா நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...