விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் இருந்த அரசியல் வசனங்களால் அப்படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. ஆனால், அதுவே படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாக அமைந்ததால் படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியது.
‘மெர்சல்’ வெளியான முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ.22 கோடி வரை வசூல் செய்தது. இந்த வசூலை ரஜினிகாந்தின் ‘காலா’ முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு ‘காலா’ படத்திற்கு எதிராக பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, பல இடங்களில் தடை விதிக்கப்பட்டதால், செய்திகளில் காலா அடிபட்டதால், படம் மிகப்பெரிய அளவில் ரீச்சாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இன்று வெளியான படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் வசூலில் படம் பின்னடைவை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், விஜயின் ‘மெர்சல்’ வசூல் சாதனையை ரஜினியின் ‘காலா’ முறியடிக்காமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், ‘காலா’வின் முன்பதிவு மந்தமாக நடைபெற்றது தான். சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கம் ஒன்றில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ‘காலா’ ஹவுஸ் புல்லாகியிருக்கிறதாம். மற்ற நாட்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...