உலகப் புகழ் பெற்ற பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆண்டனி பெளர்டன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆண்டனி பெளர்டன் ‘பார்ட்ஸ் அன்நவுண்ட்’ (Parts Unknown) என்ற நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானார். சமையல் கலைஞரான இவர் உலகம் முழுவதும் பயணித்து அனைத்து நாடுகளிலும் பிரபலமான உணவு வகைகளை காட்டுவது போல நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
சி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த உணவு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற அவர், ஓட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் உடலை பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
61 வயதாகும் ஆண்டனி பௌர்டன் இத்தாலியை சேர்ந்த நடிகை Asia Argento என்பவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...