பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் எபிசோட் ஒன்றில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த காட்சிக்கு இந்தியர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் சீரியலுக்கு எதிராக பதிவிட்டு வந்தார்கள். எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வந்த நிலையில், சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...