ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நாசரின் மனைவி வேடத்தில் நடித்தவர் லாவண்யா. அப்படத்தை தொடர்ந்து தெனாலி, சேது, கண்ணால் பேசவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது சீரியலுக்கு பிரேக் கொடுத்திருப்பவர், திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய லாவண்யா, பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வந்த திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் லாவண்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ”விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் லாவண்யாவுக்கு விரைவில் டும்...டும்...டும்...தான்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...