ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நாசரின் மனைவி வேடத்தில் நடித்தவர் லாவண்யா. அப்படத்தை தொடர்ந்து தெனாலி, சேது, கண்ணால் பேசவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது சீரியலுக்கு பிரேக் கொடுத்திருப்பவர், திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய லாவண்யா, பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வந்த திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் லாவண்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ”விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் லாவண்யாவுக்கு விரைவில் டும்...டும்...டும்...தான்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...