’காலா’வில் செல்வி என்ற ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் நடிப்பு குறித்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதிலும் ஆரம்ப காட்சியில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான வசனம் பேசும் காட்சியில் அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
‘காலா’ படத்திற்குப் பிறகு ஈஸ்வரி ராவ் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று பல பிரபலங்கள் கூறி வரும் நிலையில், தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.
இந்த நிலையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் பாலா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள ‘வர்மா’ படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘வர்மா’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...