தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தனக்கு என்று தனி பாதையை வகுத்துக்கொண்டு பயணிப்பவர். ரசிகர்களும், மன்றங்களும் தேவையில்லை, என்று அவர் அறிவித்த போது, அவருக்காக எதையும் செய்ய அவரது ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இயக்குநர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், பொழுதுபோக்கிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருபவர், பைக், கார், ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது பொழுதுபோக்கை மாற்றிக் கொண்டு வந்த அஜித், தற்போது புதிய பொழுதுபோக்கு ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆம், அஜித் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். அவரது புதிய பொழுதுபோக்கு தான் இந்த துப்பாக்கி சுடுதல், படப்பிடிப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் தினமும் மாலை நேரத்தில் துப்பாக்கி சுடுவதில் பிஸியாகிவிடுகிறாராம்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...