தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்த பிறகே வெற்றி ஹீரோவாக உருவெடுத்தார். அதே சமயம், விஜயை பெரிய ஹீரோ ஒருவருடன் நடிக்க வைத்தால் அவர் மக்களிடம் பிரபலம் ஆவார், என்பதாலேயே விஜயகாந்தை கவுரவ வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகு விஜய் மக்களுக்கு தெரிந்த நடிகராகிவிட்டார்.
இப்படி தனக்காக உதவி செய்த விஜயகாந்துக்கு நன்றியை வெறும் வார்த்தைகளால் சொன்னால் மட்டும் போதாது என்று கருதும் விஜய், அவரது மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதிபடி விஜய் தற்போது அறிமுக இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
விஜயே கதையை கேட்டு வருவதால், பல இயக்குநர்கள் ஆர்வமாக அவரை அனுகினாலும், அவர் கேட்பது சண்முகபாண்டியனுக்காக என்பது தெரிந்ததும் சற்று தயங்குகிறார்களாம்.
எது எப்படியோ விஜய் தயாரிப்பில் விஜயகாந்தின் வாரிசு நடிப்பது உறுதியாகிவிட்டது.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...