பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். சில முன்னணி நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக பேசினாலும், தங்களுக்கு இதுபோன்ற அனுபவம் நேர்ந்ததில்லை, என்று கூறுகின்றனர். ஆனால், சில வளரும் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த இதுபோன்ற பாலியல் தொல்லை சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அந்த வரிசைல், ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும் நடிகை ஒருவர் தன்னை இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தது குறித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ வில் கலந்துக்கொண்டிருப்பவர் சஞ்சனா ஆன். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறுகையில், “மாடலிங் செய்து கொண்டிருந்த போது பட வாய்ப்பு தேடி கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் பட வாய்ப்பு பேசும்போது சினிமா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றார்.
அவர் சொன்ன அந்த வார்த்தை அப்போது புரியவில்லை, பின்பு நண்பர்களால் தெரிந்துகொண்டு அவரை நேரில் சந்தித்து அடி கொடுத்தேன். பின் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 2 இரண்டில் பங்கேற்பதற்கு முன்பாக அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை சஞ்சனா கூறியிருந்தாலும், அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...