Latest News :

நடிகை அமலா பால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் முடிவு!
Monday June-18 2018

போலியான பாண்டிச்சேரி முகவரியை கொடுத்து சொகுசு கார் வாங்கிய நடிகை அமலா பால், மீது குற்றம் சாட்டிய கேரல குற்றப்பிரிவு போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நேரில் ஆஜரான நடிகை அமலா பால், கேரள படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும், அந்த விலாசத்தை வைத்தே பாண்டிச்சேரி பதிவில் சொகுசு கார் வாங்கியதாகவும் கூறினார்.

 

ஆனால், அமலா பால் தாக்கல் செய்த விபரங்கள் அனைத்தும் போலியானவை என்பதை கண்டுபிடித்த போலிஸார், அமலா பாலை கைது செய்து உடனடியாக ரிலீஸ் செய்தனர். இதற்கிடையே, தனக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, அமலா பால் சென்னை தி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தால் அவரது சொகுசு கார் விவகாரம் காணாமல் போய்விட்டது.

 

இந்த நிலையில், சொகுசு கார் வாங்கிய வழக்கு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமலாபால் உள்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளார்களாம்.

Related News

2840

”’டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய திரைப்படம் அல்ல” - இயக்குநர் எஸ்.சஷிகாந்த்
Sunday March-16 2025

ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! - பூஜையுடன் தொடங்கியது
Sunday March-16 2025

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

Recent Gallery