சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் இவர்களது குடும்ப வாழ்க்கை என்பது அவ்வளவு வெற்றிக்கரமாக அமைவதில்லை.
பல நடிகர் நடிகைகள் திருமணமான ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணும், அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு அகிரா என்ற மகன் இருக்கிறார்.
தற்போது ரேணு தேசாயுடன் வளரும் அகிராவை, பலர் ஜூனியர் பவர் ஸ்டார் என அழைக்கிறார்களாம். ஆனால், இதை விரும்பாத ரேணு தனது மகனை தயவு செய்து யாரும் அப்படி அழைக்க வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இது போல செய்து வந்தால் அவை நீக்கப்படும். இல்லையெனில் துண்டிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரேணு தேசாய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை மறுத்திருக்கும் ரேணு தேசாய் அது வெறும் வதந்தி மட்டுமே, என்று கூறியதோடு இப்போதை திருமணம் குறித்து தான் எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...