‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக குர்சியாங் என்ற இடத்தில் உள்ள அலிதா தனியார் விடுதியில் ரஜினிகாந்த் தங்கியிருந்தார். அந்த விடுதியில் உள்ள ‘டைரக்டர்ஸ் பங்களா’ என்று அழைக்கப்படும் தனி இல்லத்தில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினி தங்கியிருந்தால், அவர் நினைவாக அந்த இல்லத்தின் பெயரை ‘ரஜினிகாந்த் வில்லா 3’ என்று விடுதியின் உரிமையாளரான பெயரை மாற்றியுள்ளார். மேலும், அதே பகுதியில் ரஜினிகாந்த் டீ அருந்திய டீ கடை ஒன்றின் பெயரை ‘தலைவா ஸ்பெஷல்’ என்றும் மாற்றியுள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...