Latest News :

போலீஸை விமர்சித்து கைதான சீரியல் நடிகைக்கு 15 நாட்கள் ரிமாண்ட்!
Friday June-22 2018

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், சீரியல் நடிகை நிலானி, போலீஸ் உடையை அணிந்துக்கொண்டு, தூத்துக்குடி சம்பவம் குரித்து பேசியதோடு, காவல் துறையை கடுமையாக விமர்சித்து பேசினார்.

 

படப்பிடிப்புக்காக போலீஸ் உடையை அணிந்துக் கொண்டிருந்த அவர், ”போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக” தெரிவித்திருந்தார். வாட்ஸ்-அப்பில் வெளியான அவரது வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, நிலானியும் பிரபலமானார்.

 

இந்த நிலையில், குன்னூரில் வைத்து நிலானியை கைது செய்த போலீஸார், குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்ற் காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 

பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News

2858

”’டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய திரைப்படம் அல்ல” - இயக்குநர் எஸ்.சஷிகாந்த்
Sunday March-16 2025

ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! - பூஜையுடன் தொடங்கியது
Sunday March-16 2025

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

Recent Gallery