சமூக வலைதளத்தில் எப்பொதும் தொடர்பில் இருக்கும் நடிகைகள் என்ற பட்டியல் தயாரித்தால் அதில் நடிகை கஸ்தூரி தான் முதலிடம் பிடிப்பார். பிற நடிகைகளைக் காட்டிலும் சமூக வலைதளத்தில் கஸ்தூரியின் எண்ட்ரி லேட்டாக இருந்தாலும், தற்போது அவர் தான் டெரராக இருக்கிறார்.
அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து துறையினர் பற்றியும் விமர்சிக்கும் கஸ்தூரி, தனது கருத்துக்களை தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறிவருவதால், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே ‘தமிழ் படம் 2’-வில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தது சர்ச்சையானது. இதை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு அவரும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், கஸ்தூரியின் மேலும் ஒரு செயலால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது, வணக்கம் ட்விட்டர் மொமண்டில் இணைந்துள்ள கஸ்தூரி, ”பிடிச்சு பின்னால வந்தவங்களுக்கும், கடிச்சு கலாய்க்க நிந்தவங்களுக்கும் அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும். அத்தனை பேருக்கும் உம்ம்மா...” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த உம்மா...வை பற்றி தற்போது கருத்து கூறி வரும் நெட்டிசன்கள், அவரை கலாய்க்க செய்வதோடு, கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...