செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், போமன் இரானி என்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். ஹீரோயினாக சயீஷா நடிக்கிறார்.
பயணம் தொடர்பான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி, அங்கேயே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் லண்டனில் உள்ள ஜிப்சன் ஹால் என்ற இடத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சூர்யா மற்றும் படக்குழுவினரை இலவசமாக நேரில் பார்க்கலாம், என்ற அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டது. இதனால் லண்டனில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் பெரும் ஆவலோடு சூர்யாவை நேரில் பார்க்க காத்திருந்தார்கள்.
இந்த நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்ட அந்த செய்தி தவறுதலானது, என லைகா நிறுவனமே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தவறுதலுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...