ரஜினிகாந்தை வைத்து 11 ஹிட் படங்கள் கொடுத்த பிரபல இயக்குநர் ஆர்.தியாகராஜன் நெஞ்சுவலியால் இன்று மரணம் அடைந்தார்.
பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் மருமகனும், இயக்குநருமான ஆர்.தியாகராஜன், சென்னை போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
75 வயதாகும் ஆர்.தியாகராஜன், இன்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆட்டுக்கார அலமேலு’, ‘தாயில்லாமல் நானில்லை’ உள்ளிட்ட 28 படங்களை இயக்கியிருக்கும் ஆர்.தியாகராஜன், ரஜினிகாந்தை வைத்து ‘ரங்கா’, ‘தாய் வீடு’, ‘அன்புக்கு நான் அடிமை’ உள்ளிட்ட 11 வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...