‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எந்த நிலையிலும் தான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.
அத்துடன், எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...