அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தாலும், திரைப்படங்களில் நடிப்பதில் தான் ரஜினிகாந்த் ஆர்வமாக இருக்கிறார். இதனால் அவரது அரசியல் பிரவேசம் இன்னமும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், அவரது மனைவி லதா தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது, ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் குறித்து பேசியிருக்கிறார். இதனை ராஜ்தாக்ரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பால்தாக்ரேவை தனது கடவுள் என்று ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்தின் மனைவி அவரது குடும்பத்தாரை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இன்னம் அரசியல் கட்சியே தொடங்கவில்லை, அதற்குள்ளாகவே ரஜினியின் குடும்பத்தார் அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார்களே, என்று ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளே சற்று அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...