பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்ல்களை பாடியிருப்பதோடு, பல்வேறு விருதுகளையும், 4 முறை தெசிய விருதும் வாங்கியிருக்கிறார். தற்போது 80 வயதாகும், அவர் தனது மகனுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்தும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவ்வபோது வதந்திகள் பரவி வருகிறது. பல முறை இதுபோன்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் கூட இதுபோன்ற வதந்தி ஒன்று வைரலானது.
இந்த நிலையில், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள இசையமைப்பாளர்கள் சங்கம் கேரள காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறது. இதையடுத்து, கேரள காவல் துறை ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பும் நபரை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி, சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, கேரள சைபர் க்ரைம் போலீசார், இந்த வழக்கில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால், பாடகி ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்புபவர் விரைவில் சிக்குவார் என தெரிகிறது.
ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் துரை கே...
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் மிலிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’...
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்...