பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யா பாலன், தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள் தான். அந்த வகையில், மீண்டும் தென்னிந்திய சினிமாவில் வித்யா பாலன் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது.
‘என்.டி.ஆர் பயோபிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை, பிரபல நடிகரும், என்.டி.ஆர்-ன் மூத்த மகனுமான நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரித்து, என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யாபாலன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிப்பதால், இப்படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
கிரிஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன், சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்...
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...
ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...