‘பார்ட்டி’ படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில், சிம்பு படம் முடிந்த பிறகு கிரிக்கெட் சம்மந்தமான படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க போகிறாராம். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சந்தித்து பேசியிருக்கும் வெங்கட் பிரபு, இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக அளவில் சுழற்பந்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...