கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட திரைப்படமாகவும் திகழ்ந்தது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகள் சிலவற்றிலும் ‘மெர்சல்’ படம் அமோக வசூல் ஈட்டியது.
இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது விஜயும், அவரது படங்களும் இந்திய அளவில் ரீச் ஆகி வருகிறது.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வியாபாரம் தொடங்கியிருப்பதாகவும், இதுவரை ரூ.105 வரை வியாபாரம் பேசப்பட்டு வருதாகவும் கூறப்படுகிறது.
பஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியிருக்கும் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய வியாபாரம் பேசப்பட்டிருப்பதை அறிந்து ஒட்டு மொத்த கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்திருக்கிறதாம். அதே சமயம், வரும் நாட்களில் இந்த தொகை இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், கடந்த தீபாவளிக்கு எப்படி மெர்சல் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியதோ, அதுபோல இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘சர்கார்’ கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாகிறதோ, அதே அளவுக்கு பல அதிரடியான காட்சிகளோடு, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு பரபரப்பான திரைக்கதையோடும் உருவாவதாக சிலர் கூறியுள்ளனர்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...