டிவி செய்தி வாசிப்பளராக தனது ஊடக பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து ஏராளமான ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர், திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்தார்.
நடிப்பதை நிறுத்திவிட்டு தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகப்போவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பால் அதிர்ச்சியான இவரது ரசிகர்கள், தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கிடையே, ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், முதல் திரைப்படத்திலேயே பலரது பாராட்டை பெற்றார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருப்பவர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி பல பட வாய்ப்புகள் தனக்கு வருவதால் பிரியா பவானி சங்கர் திக்குமுக்காடி போயிருக்கிறாராம்.
இந்த நிலையில், தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொணடு கோடம்பாக்கத்தில் ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பவர், தனது ஆஸ்திரேலிய காதலரை கழட்டி விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது...
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...