நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றி மூலம் நயந்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தை இயக்கிய கோபி நயினாரின் அடுத்தப் படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்த இயக்குநர் கோபி நயினார், அறம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் செய்துவிட்டேன், ஆனால் எனது அடுத்த படமாக அது இருக்காது, வேறு ஒரு கதையை எடுத்த பிறகே அறம் இரண்டாம் பாகத்தை எடுப்பேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், வட சென்னையையும், அங்கு இருந்த பிரபல பாக்ஸர்களின் வாழ்வியலையும் தனது அடுத்தப் படமாக கோபி நயினார் எடுக்க இருக்கிறாராம். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தனது கதை என்று கோபி நயினார் கூறியிருந்தார். மேலும், மெட்ராஸ் படத்திற்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை வைத்து இயக்க இருந்த படமும் பாக்ஸிங் பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...