சென்னை,மார்ச் 29 : தனது கனீர் குரலினால் தமிழர்களை ஆட வைத்த பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படத்தில் “கலாசலா கலாசலா...” என்ற பாடலை பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார். இந்த பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதேபோன்ற ஒரு அதிரடி குத்து பாடலை ‘தொல்லைக்காட்சி’ படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார்.
நா.முத்துக்குமார் எழுதிய இந்த பாடலுக்கு தரண் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறுகையில், “இந்த பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக இருக்கிறது. மீண்டும் ஒரு “கலாசலா” பாடலைப்போல் வெற்றி பெரும்” என்றார்.
இந்த பாடலின் படபிடிப்பிற்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கயலாலயா நிறுவனம் சார்பில் பாலசெந்தில்ராஜா தயாரிக்க, எம்.சாதிக்கான் இயக்கியுள்ள இப்படத்தில், அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...