தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் கால் பதித்த சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்து பிறகு வெள்ளித்திரையில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
‘மெரீனா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனது காமெடி திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இருக்க கூடிய ஓபனிங்கோடு வசூல் மன்னனாக வலம் வருகிறார்.
இதற்கிடையே, சொந்தமாக திரைப்படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளவர், தற்போது பாடலாசிரியராகவும் உயர்ந்துள்ளார். நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதிய “கல்யாண வயசு...” பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்கு பாடல் எழுதியதற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பள தொகையை மறைந்த பிரபல பாடலாசிரிய நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரீனா’ திரைப்படத்தில் நா.முத்துக்குமார் மூன்று பாடல்கள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...