கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் இரண்டில், தாடி பாலாமி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் இடையிலான உறவு தான் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தி சென்ற நிலையில், தற்போது நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும், நித்யா அளித்து வரும் பேட்டியில் பிக் பாஸ் பரபரப்பாகிக் கொண்டு தான் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவும், தாடி பாலாஜியும் மீண்டும் இணைந்தது போல் காட்டியது எல்லாமே பொய், என்று நித்யா கூறியது முதல் அதிர்ச்சியாக இருந்த நிலையில், அடுத்தடுத்த அதிர்ச்சியாக பல விஷயங்களை கூறி வருகிறார்.
இந்த நிலையில், பாலாஜியுடன் தான் ஒரு போதும் சேர மாட்டேன், நிச்சயம் அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவேன், என்று கூறியிருக்கும் நித்யா, மற்றொரு பேட்டியில், ”ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து, பெண் என்பதை விட ஒரு அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பர்சனல் ஸ்பேஸ் கொடுத்தாலே நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...