’நிமிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள நமீதா பிரமோத், மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.
நடிப்பு, நடனம் என இரண்டிலும் பாராட்டு பெற்று வரும் இவர், கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, என்று கூறுவதோடு, தமிழ் சினிமாவின் கிரியேட்டிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறாராம்.
நமீதா பிரமோத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கம்மர சம்பவம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவர் நடித்த பானுமதி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை கூடுதலாக ஈர்த்தது. தற்போது திலீப்புடன் 3டி படம் ஒன்றில் நடித்து வரும் நமீதா பிரமோத், அப்படம் பற்றி கூறுகையில், “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.” என்றார்.
தனது நடனத் திறமை பற்றி கூறியவர், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டேன்.” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார்.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...