கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘சோலையம்மா’ படம் மூலம் கொடூரமான வில்லனாக அறிமுகமானவர் ‘கரிகாலன்’. இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், ’ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைச்சங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பு ரோஜா’, ‘தயா’, ‘தேவன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்ததோடு, ‘வைரவன்’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.
சில காலம் நடிப்பு இயக்கம் என்று எதிலும் ஈடுபடாமல், ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தியவர் அதில் உச்சத்தை தொட்டார்.
தற்போது மீண்டும் சினிமாத் துறைக்கு திரும்பியிருக்கும் கரிக்காலன், காமராஜார் மீது கொண்ட பற்றின் காரணமாக, ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல்வேறு வகையில் மக்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, திரைப்படங்கள் வாயிலாகவும் ஒழுக்கங்களை போதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளவர் 10 திரைப்படங்களை தனது காமராஜர் கனவுக் கூடம் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் கரிகாலன், “மது ஒரு மனிதனையும், அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல, ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி வருகிறது. அடிப்படை கல்வியால் போதிக்க வேண்டிய கல்வி, ஒழிக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கும் மரியாதை, உற்சாகமாக இருப்பது, உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அதும் மட்டும் அல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம். அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்.
இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும். இதையெல்லாம் நடை முறை படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அந்த ஆயுதம் சினிமா, அதனால் தான் சினிமா நிறுவனம் ஆரம்பித்துள்ளேன்.
அதன் மூலம் சமுதாயத்திர்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க இருக்கிறோம்.
எங்களால் எல்லோரையும் திருத்த முடியாது, ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற என்ணம் தான் எங்களுக்கு.
நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் எனக்கு ஒரு ஆசை, என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்.” என்றார்.
10 படங்களில் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்திற்கு ‘பெருந்தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, அதில் கதையின் நாயகனாக கரிகாலன் நடிக்க, அவருடன் நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.
இந்த படத்துடன் இன்னும் இரண்டு படங்கள் என மூன்று படங்களின் தொடக்க விழாவை விரைவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கும் கரிகாலன், அந்த நிகழ்ச்சி திரைப்படங்கள் குறித்த பிற விபரங்களை அறிவிக்க உள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...