’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வியால் துண்டுபோன சிம்பு தற்போது மீண்டும் துடிதுடிப்போடு இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘செக்க சிவந்த வானம்’ செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகப் போகிறது. அப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் ‘மாநாடு’ படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படமான ‘மாநாடு’ அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மங்காத்தா படத்தில் எப்படி அஜித் ஹீரோ கம் வில்லன் என்று நடித்தாரோ அதேபோல் தான் ‘மாநாடு’ படத்திலும் சிம்பு வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடிக்கிறாராம்.
அதுமட்டும் இன்றி, மங்காத்தா படத்தில் மறைமுகமாக அரசியல் செய்து அஜித் பணத்தை அபேஸ் செய்தார் என்றால், இந்த படத்தில் அதே ரூட்டில் சிம்பு பயணித்தாலும், நேரடியாக அரசியல் செய்வதும், அதன் மூலம் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பதும், மங்காத்தா பட பாணியிலேயே இருக்குமாம். இதன் காரணமாகவே சிம்புவின் மாநாடு அஜித்தின் மங்காத்தா-வின் இரண்டாம் பாகமாகவும் கருதப்படுகிறதாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...