தெலுங்கு சினிமா நடிகையான ஸ்ரீரெட்டி, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டு பிறகு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியதாக தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும், தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, இனி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்ததோடு, தமிழ் சினிமாவில் நடிக்கும் முடிவில் இருப்பதோடு, தமிழ் சினிமா பிரபலங்களில் தன்னை யார் யார் ஏமாற்றினார்கள்? என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட முதல் பட்டியலில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள்.
இந்த நிலையில், ஸ்ரீரெட்டிக்கு ஏகப்பட்ட தமிழ்ப் பட வாய்ப்புகள் வருகிறதாகவும், அதில் விஜயின் 63 வது படமும் ஒன்று என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்க இருக்கும் இந்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...