தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித், படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, சினிமாவை தவிர்த்து வேறு சில விஷயங்களிலும் ஆர்வமுடையவர்.
பைக் ரேஸியில் ஈடுபட்டு வந்த அவர் தற்போது அதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், புகைப்படம் எடுப்பது, சமையல், குட்டி ரக விமானங்களை இயக்குவது, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையின் பிரபல கல்கலைக்கழகத்தில் விமானம் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றிய அஜித், அம்மாணவர்கள் போட்டி ஒன்றில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் அப்துல்கலாம் விருது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்படுகிறது. இந்த தக் ஷா குழுவிற்கு தான் அஜித் பொருப்பாளராகவும், ஆலோசகராகவும் இருந்தார்.
அதன்படி, தமிழக அரசு வழங்கும் இந்த உயரிய கெளரவத்திற்கு அஜித்தும் சொந்தக்காரர் என்பதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...