மலையால நடிகையான மஞ்சுமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், தற்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பல மலையாளப் படங்களிலும் நடித்து வரும் மஞ்சுமா, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு மனைவியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர் வேடத்தில் நடிக்க, அவரது மருமகன், அதாவது தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா நடிக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.ஆரின் மகள் புவனேஸ்வரி வேடத்தில் மஞ்சுமா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. என்.டி.ஆரின் மகள் புவனேஸ்வரி தான் சந்திரபாபு நாயுடுவின் மனைவி என்பதால், மஞ்சுமா மோகன் சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணாவுக்கு ஜோடியாகிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...