மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை வைப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
தெலுங்கில் உருவாகி வரும் என்.டி.ஆரின் வாழ்க்கை திரைப்படம் மற்றும் இந்தியில் உருவாகி வரும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை திரைப்படமான ‘83 உலகக் கோப்பை’ ஆகிய திரைப்படங்களை வைப்ரி மீடியா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சினிமாத் துறையில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா அரசியலிலும் மிகப்பெரிய ஏற்றம் கண்டார். இந்திய அரசியலில் முக்கியமான பெண் தலைவராக கருதப்படும் அவரது சாதனைகள் ஏராளாம். பெண்களுக்கான வழிகாட்டியாகவும், உலக அளவில் பெண்களுக்கான முன்னுதாரணமாக விளங்கிய ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதோடு, அன்றே இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதற்காக முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் படக்குழுவினர் அது குறித்த விபரத்தை ரகசியமாக வைத்திருப்பதோடு, படத்தின் பஸ்ட் லுக் வெளியிடும் போதே அந்த நடிகை யார்? என்ற தகவலையும் வெளியிட இருக்கிறார்கள்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் தனது படங்களை வெற்றிப் படங்களாக்கி வரும் இயக்குநர் விஜய், தான் இப்படத்தை இயக்குகிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...