திரைப்பட இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
‘காமராசு’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி தயாரித்திருக்கும் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார். இவர் ‘அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்!’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் வெளியீட்டு விழா சமீபத்தில் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...