செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்புக்கு சில நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த தகவலை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவண்ணம் இருந்தார்கள்.
நேற்று ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு தளத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்ததைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியாகிவிட்டனர். சில மணி நேரங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தை சூழ்ந்துக்கொண்டார்கள். பிறகு கேரவேனில் இருந்து சூர்யா வெளியே வந்ததும் அவரை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள் “ராஜு பாய்”ம் “சூர்யா” என்று கோஷமிட்டனர். சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.
தமிழில் எப்படி சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல், ஆந்திராவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, அவரது படங்கள் அனைத்தும் தெலுங்கில் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிப்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...