தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலி, தனது குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் சினிமாவை உதறிவிட்டு ஆந்திராவில் அடைக்களம் அடைந்தார். தொடர்ந்து அங்கேயே சில படங்களில் நடித்து வந்தவர், தமிழகத்தின் பக்கமே தலைக்காட்டவில்லை.
இதையடுத்து குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்ததும் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதே சமயம், நடிகர் ஜெய்யுடனான காதலையும் வளர்த்து வந்தவர், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தாங்கள் காதலிப்பது உண்மை என்பதை சொல்லாமல் சொல்லினார்கள்.
இதற்கிடையே, ஜெய் - அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ஜெயின் கடந்த பிறந்தநாளன்று அஞ்சலி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இவர்களது காதல் முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, ஜெய் அஞ்சலியை இஸ்லாம் மதத்திற்கு மாற சொன்னார், என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்யுடனான காதலை முறித்துக் கொண்ட அஞ்சலி, அதனால் புதிய பிரச்சினையை எதிர்க்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சினிமாவில் சற்று தலை தூக்க ஆரம்பித்த அஞ்சலி, பிஸியான நடிகையானவுடன் நள்ளிரவு நேரத்தில் அவருக்கு ஏடாகூடமான போன்கள் வருமாம். பிறகு ஜெய்யை அவர் காதலிக்க தொடங்கியவுடன் அதுபோன்ற போன் கால் வருவது நின்றிவிட்டதாம். தற்போது ஜெய்யுடன் காதல் முறிவு ஏற்பட்ட அஞ்சலிக்கு, அந்த ஏடாகூட போன் கால்கள் மீண்டும் வர தொடங்கிவிட்டதாம்.
இதனால், அஞ்சலியின் போன் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி ஒலிக்க, அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...